search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. பொதுக்கூட்டம்"

    • ஆரணி அருகே கலைஞர் தீவு திடலில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி அருகே வெள்ளிரி கிராமத்தில் உள்ள கலைஞர் தீவு திடலில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம், நகரச் செயலாளர் ஏ.சி.மணிஆகியோர் முன்னிலை வகித்தனர்

    ஒன்றிய செயலாளர் அன்பழகன் வரவேற்றார் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் தலைமை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள் பொன்னேரி சிவா, ஆவடி பாஸ்கர் பங்கேற்றனர்.

    ஒன்றிய செயலாளர்கள் மோகன், துரை.மாமது, கண்ணமங்கலம் பேரூராட்சி செயலாளர் கோவர்தன், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட கவுன்சிலர் அருணா குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் விமலா காசிநாதன், சேவல் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இறுதியில் கிளைச் செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

    • பொதுக்கூட்டம் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை வாரியார் திடலில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தங்கமணி ஏற்பாட்டின் பேரில் 1000 பெண்களுக்கு இலவச புடவை வழங்கப்பட்டது

    தருமபுரி,  

    தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சியின் தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை வாரியார் திடலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

    நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்று பேசினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அன்பழகன், நகர அவைத் தலைவர் அழகுவேல், நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவள்ளி ரவி, நகர பொருளாளர் சம்மந்தம், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், சுருளிராஜன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெகன், பாண்டியன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் குடியாத்தம் குமரன், தருமபுரி அதியமான் ஆகியோர் கலந்துகொண்டு தமிழக அரசு நிறைவேற்று வரும் திட்டங்கள் குறித்தும், தி.மு.க. அரசு செய்து வரும் சாதனைகள் குறித்தும் விலக்கி பேசினர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தங்கமணி ஏற்பாட்டின் பேரில் 1000 பெண்களுக்கு இலவச புடவை வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ரேணுகாதேவி, பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சரஸ்வதி துரைசாமி, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், செல்வராஜ், சேட்டு, வைகுந்தம், மல்லமுத்து, கருணாநிதி, சபரிநாதன், மடம்முருகேசன், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கவுதம், முத்துலட்சுமி, பொன்மகேஸ்வரன், ராஜா, ரவி, காசிநாதன், ரஹீம், குமார், நிர்வாகி எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி கவுன்சிலர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.

    • பொதுக்கூட்டத்திற்கு புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார்.
    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், மேலக்கரந்தை மற்றும் வெம்பூர் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் தலைமை பேச்சாளர் பவானி கண்ணன் பேராசிரியரின் கொள்கை குறித்தும், கழக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் நகர செயலாளர் மருது பாண்டியன், ஒன்றிய அவைத் தலைவர் பொன்ராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ரவி, பாலையா, ஒன்னம்மாள், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலா ளர்கள், அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அன்பழகன் நூற்றாண்டு விழா பொது கூட்டம் நடைபெற்றது.
    • கதிர் ஆனந்த் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இண்டூர் பேருந்து நிலையம் அருகே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொது கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமை தாங்கினார். நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம், ஒன்றிய தலைவர் பெரியண்ணன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் மாநில தலைவரும், வேலூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியின் முடிவில் 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை கதிர் ஆனந்த் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் வேலூர் கென்னடி, விவசாய தொழிலாளர் அணி மாநில துணை தலைவர் இன்பசேகரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தர்மசெல்வன், மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஜி.சேகர், நகர செயலாளர் நாட்டான் மாது மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • தனியார் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் ஒருங்கிணைந்த ேகாவை மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று மாலை பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    இன்று காலை கோவை ஈச்சனாரி பகுதியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    அதன்பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பொள்ளாச்சிக்கு சென்றார்.

    மாலை 5 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து தி.மு.க. கட்சி விழா நடைபெறும் ஆச்சிபட்டி திடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.

    50 ஆயிரம் பேர்

    இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைய உள்ளனர். அதன்பிறகு முதல்-அமைச்சர் கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி, விழாவில் பேசுகிறார்.

    இதனையொட்டி அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேராக பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திருப்பூர் செல்கிறார்.

    நாளை காலை 10 மணிக்கு திருப்பூரில் அவர் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதியம் ஒரு மணிக்கு அங்கிருந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் செல்கிறார். அங்கு கள்ளிப்பட்டியில் மாலை 5 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை திறந்துவைக்கிறார்.

    நாளை மறுநாள் (26-ந் தேதி) காலை 10.45 மணிக்கு பெருந்துறையில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து மீண்டும் கோவை வரும் மு.க.ஸ்டாலின் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அன்று இரவு அவர் சென்னை திரும்புகிறார்.

    ×